கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அப்துல் ஹக்கீமுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. ஜமாத் இ இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் மாவட்டச் செயலரான இவர், பல்வேறு மதத்தினரிடையே சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்த பாடுபட்டதற்காக "சமாதான சிற்பி" விருது வழங்கப்பட்டது.

கோவை மாவட்ட யோகா சங்கத் தலைவர் வி.சுப்பிரமணியன் விருதினை வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மாநில ஆணையர் எஸ்.முருகய்யா விழாவை துவக்கி வைத்தார். தமிழ்நாடு மாநில யோகா சங்கத் தலைவர் டாக்டர் பி.கோபாலானந்தா தலைமையுரையாற்றினார். கதிர் கல்விக் குழுமத்தின் நிறுவனத் தலைவர் இ.எஸ்.கதிர், ஜமாத் இ இஸ்லாமி ஹிந்த் அமைப்பு நிர்வாகிகள் மற்றும் தன்னார்வு அமைப்புகளைச் சேர்ந்த பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

கோவை மாவட்ட யோகா சங்கத் தலைவர் வி.சுப்பிரமணியன் விருதினை வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மாநில ஆணையர் எஸ்.முருகய்யா விழாவை துவக்கி வைத்தார். தமிழ்நாடு மாநில யோகா சங்கத் தலைவர் டாக்டர் பி.கோபாலானந்தா தலைமையுரையாற்றினார். கதிர் கல்விக் குழுமத்தின் நிறுவனத் தலைவர் இ.எஸ்.கதிர், ஜமாத் இ இஸ்லாமி ஹிந்த் அமைப்பு நிர்வாகிகள் மற்றும் தன்னார்வு அமைப்புகளைச் சேர்ந்த பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.